தமிழ் சிறுகதைகள்
Tuesday, November 1, 2022
சத்திய ஆராதனை 2nd November 2022
Sunday, October 30, 2022
சத்திய ஆராதனை 31st October 2022
Thursday, December 5, 2019
கடவுள்
Wednesday, September 11, 2019
நேர்மை
ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் முதலாளிக்கு வயதாகி விட்டதால்,
அவர் தம் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம்,
நேர்மையானவரிடம்,
உண்மையாளரிடம்,
ஒப்படைக்க முடிவு செய்தார்.
எல்லா ஊழியர்களையும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார்.
அனைவரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
முதலாளி பேச ஆரம்பித்தார்:
அன்புள்ள ஊழியர்களே,
என்னுடைய ஓய்வுக்குப் பின்,
உங்களில் ஒருவர் தான் என்னுடைய இந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும்.
அதனால் உங்களுக்கு நான் ஒரு போட்டி வைக்கப் போகிறேன்.
யார் வெற்றியடைகின்றார்களோ,
அவர் தான் நம் நிறுவனத்தின் அடுத்த மேலாளர் என்றார்.
இப்போது என் கையில்,
பலதரப்பட்ட,
பல வகைகளை சார்ந்த,
ஏராளமான விதைகள் இருக்கின்றன.
யாருக்கு எந்த விதை வரும் என எனக்கே தெரியாது.
இதை உங்களிடம் ஆளுக்கு ஒன்றாக கொடுப்பேன்.
இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு,
உரம் இட்டு,
தண்ணீர் ஊற்றி,
நன்றாக வளர்த்து,
அடுத்த வருடம் இதே நாளில்,
என்னிடம் எடுத்து வந்து காட்ட வேண்டும்.
யாருடைய செடி நன்றாக உயரமாக, போஷாக்காக, வளர்ந்து இருக்கிறதோ,
அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.
அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கிச் சென்றனர்.
அந்த கம்பெனியில் வேலை செய்யும்
ராமகிருஷ்ணன்க்கும் ஒரு விதை கிடைத்தது.
அவர் ஆர்வத்துடன் அதை வாங்கி சென்றார்.
தன் மனைவியிடம் போய் முதலாளி சொன்ன அனைத்தையும் அப்படியே சொன்னார்.
அவன் மனைவி தொட்டியும், உரமும்,தண்ணீரும் எடுத்து அவருக்கு கொடுத்து,
அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.
ஒரு வாரம் கழிந்தது.
நிறுவனத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.
ஆனால் ராமகிருஷ்ணன்னின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.
ஒரு மாதம் ஆனது ம்ஹூம்.
செடி வளரவே இல்லை,
நாட்கள் உருண்டோடின.
ஆறு மாதங்கள் ஆனது.
அப்பொழுதும் அவர் தொட்டியில் செடி வளரவே இல்லை.
நான் விதையை வீணாக்கி விட்டேனா என்று எண்ண ஆரம்பித்தார்.
ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.
தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று அலுவலகத்தில் யாரிடமும் அவர் சொல்லவும் இல்லை.
ஒரு வருடம் முடிந்து விட்டது.
எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.
ராமகிருஷ்ணன் தன் மனைவியிடம்:
காலி தொட்டியை நான் எடுத்துப் போக மாட்டேன்,
எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னார்.
அவர் மனைவி அவரை சமாதானப்படுத்தி சொன்னார்:
நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி தானே செய்தீர்கள்.
செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை.
அதற்கு நீங்கள் காரணமும் அல்ல.
நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.
ராமகிருஷ்ணன் காலி தொட்டியை அலுவலகத்திற்க்கு எடுத்து சென்றார்.
எல்லாரும் தொட்டிகளை அவர் கண் முன்னே கொண்டு சென்றார்கள்.
விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.
பல்வேறு விதமான பூக்கள் அவைகளில் பூத்துக் குலுங்கின.
ராமகிருஷ்ணன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்தார்.
எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.
அருமை.
எல்லாரும் செம்மையாக செடியை வளர்த்து உள்ளீர்கள்.
உங்களில் யாரோ ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்கள் என்றார்.
ராமகிருஷ்ணன் கடைசி வரிசையில் நின்றிருந்தார்.
அவரை அருகே வருமாறு அழைத்தார்.
முதலாளி தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார்,
என்று எண்ணி பயந்து கொண்டே சென்றார் ராமகிருஷ்ணன்.
முதலாளி ராமகிருஷ்ணன் உங்கள் செடி எங்கே?
என்று கேட்டார்.
ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக எடுத்துச் சொன்னார் ராமகிருஷ்ணன்.
முதலாளி ராமகிருஷ்ணனை தவிர அனைவரையும் உட்காருமாறு கூறினார்.
பிறகு ராமகிருஷ்ணன் தோளில் கையை போட்டுக் கொண்டு:
நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர் தான் என்றார்.
ராமகிருஷ்ணன்னுக்கு ஒரே அதிர்ச்சி.
தன் தொட்டியில் செடி வளரவே இல்லையே!
பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார்?
என்று குழம்பிப் போனார்.
முதலாளி பேச ஆரம்பித்தார்:
சென்ற வருடம் நான் உங்களிடம், ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா?
அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள் [Boiled seeds].
அந்த விதைகள் அவிக்கப்பட்டதால்,
அது முளைக்க இயலாது.
அவை அனைத்துமே முளைக்கும் தன்மையை இழந்துவிட்டது.
நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால்,
அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்திருக்கின்றீர்கள்.
ராமகிருஷ்ணன் மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டார்.
ஆகவே அவரே என் நிறுவனத்தை நிர்வகிக்க தகுதியானவர் என்றார்.
*நாம் சொல்லும் சொல், நாம் பயணிக்கும் பாதை, நேர்மையாக இருந்தால் மட்டும் போதும், வெற்றிகள் நம்மைத் தேடி ஓடி வரும்.*
வாழ்க்கையில் நேர்மையாக இருக்க முயல்வதும் ஒரு போராட்டம் தான்.
அதில் வெற்றி பெருவது தான் உண்மையான வெற்றி.
உண்மையும்,
நேர்மையும்,
தர்மத்தை பாதுகாக்கும்,
நேர்மை ஒரு போதும் வீண் போகாது.
*நேர்மையை விதையுங்கள். பதவியும் பணமும் தானாக உங்களை தேடி ஓடி வரும்.*
புகழ் வர வேண்டாம்.
ஏனெனில்,
அந்த புகழுக்கு உரியவன் இறைவன் ஒருவன் மட்டுமே!
Wednesday, July 11, 2018
ராஜாவும் பரிசும்
*_🌷🙏🏼🌷குட்டி கதை_*
_ஒரு "ராஜா" தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார்._
_திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும்._
_மந்திரி கூட நான்கு காவல்காரகளையும் அழைத்துச் செல்வார்._
_ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது._
_காட்டு வழியே வரும்போது திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள்._
_மந்திரியும் காவலர்களும் வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு நின்று விடுகிறார்கள்._
_எங்கிருந்தோ "ஆறு இளையர்கள்" வந்து அவர்களை காப்பாற்றுகிறார்கள்._
_மந்திரியுடன் ஆறு இளையர்களும் "ராஜாவிடம்" வருகிறார்கள்._
_"ராஜாவும்" மிகவும் சந்தோஷமடைந்து இளையர்களிடம்,_
_”உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்” என்று கூறுகிறார்._
_"முதல்" இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்கிறான்._
_"இரண்டாவது" இளைஞன் வசிக்க நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான்._
_"மூன்றாவது" இளைஞன் தான் வசிக்கும் கிராமத்தில் சாலைகள் சீர் செய்ய வேண்டும் என்று கேட்கிறான்._
_"நான்காவது" இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறான்._
_"ஐந்தாவது" இளைஞன் தன் குடும்பத்தினர் இழந்த மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்று கேட்கிறான்._
_அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன "ராஜா",_
_"ஆறாவது" இளைஞனைப் பார்த்து “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்கிறார்._
_இளைஞன் சற்று தயங்குகிறான்,_
_"ராஜா" மீண்டும் கேட்க இளைஞன் கூறுகிறான்,_
_"அரசே எனக்கு பொன், பொருள் என்று எதுவும் வேண்டாம்._
_வருடம் ஒருமுறை நீங்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என்னுடன் இருந்தால் போதும்” என்று சொன்னான்._
_"ராஜாவும்" இவ்வளவுதானா என்று முதலில் கேட்டார்._
_பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையை தெரிந்து கொண்டார்..._
_ஆம்._
_"ராஜா" அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால்,_
_அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும்._
_அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும்._
_வேலைக்காரர்கள் வேண்டும்._
_அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும்._
_சொல்லப் போனால் முதல் "ஐந்து" இளைஞர்களும் கேட்து எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும்._
_என்று தன் மகளையே திருமணம் செய்து கொடுத்தார் ,_
_என்று . . . ,_
_இந்தக் கதையை முடித்தார் பேச்சாளர்._
_இந்தக் கதையில் கூறிய "ராஜாதான்" அந்த "இறைவன்"._
_பொதுவாக எல்லோரும் "இறைவனிடம்"கதையில் கூறிய ,_
_முதல் "ஐந்து" இளைஞர்களைப் போல்,_
_தனக்கு வேண்டியதைக் கேட்பார்கள்._
_கடைசி இளைஞனைப் போல் "இறைவனே"நம்மிடம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் ,_
_மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும் என்பதற்கு,_
_எடுத்துக் காட்டாக இந்தக் கதையைக் கூறினார்._
*_முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்._*
Thursday, July 5, 2018
அப்பாக்கள் வரம்.
எழுதியது யாருனு தெரியலை...
படித்ததில் பிடித்தது ........
தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)
அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)
மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.
ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.
ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.
மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.
ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.
அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.
அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.
அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.
“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.
அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.
அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.
அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.
அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.
மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.
இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.
செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.
அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.
முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.
யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.
ஆனால், அப்பாக்கள் வரம்.
Tuesday, July 3, 2018
சிகரெட் விற்பனை
பால.ரமேஷ்.
தினம் ஒரு குட்டிக்கதை.
ஒரு தேசத்தில் சிகரெட் விற்பனை கிடையாது, யாரும் குடிப்பதும் கிடையாது...!!
அங்கு உள்ள சிகரெட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது..
அவன் ஒரு பிரச்சார உக்தியை கையாண்டான்...
.
அதற்கு ஒரு விளம்பரம் செய்தான்..!!
.
சிகரெட் குடித்தால்..:-
1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்..!
2 உங்களுக்கு முதுமையே வராது..!
3 உங்களுக்குப் பெண் குழந்தையே பிறக்காது..!
.
இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரெட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்..!
அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் ஒருவர், இந்தக் கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
நீதி மன்றத்தின் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது...
.
சிகரெட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜரானார்.
.
நீதிபதி அவரிடம்,
“இப்படி சில கருத்துக்களை விளம்பரம் செய்து உள்ளாய்.
இவை அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே?“ என்று கேட்டார்.
.
அதற்கு அவன்,
“முதலில் நான் என்ன சொன்னேன்...?"
1. திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்.
"ஆமாம் வரமாட்டான்..!"
காரணம்? எப்பொழுது சிகரெட் குடிக்க ஆரம்பித்து விட்டார்களோ, அப்பொழுதே இருமல் வந்து விடும்..!
இருமிக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது. 😳
முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரவேமாட்டான்...!
.
2 வது என்ன சொன்னேன்?
"முதுமையே வராது.."
ஆமா எப்படி வரும்...?
சிகரட் குடித்தால் இளமையிலேயே செத்து விடுவான். எப்படி முதுமை வரும்...?
.
3 வது என்னசொன்னேன்?
"பெண் குழந்தை பிறக்காது..."
ஆமா எப்படி பிறக்கும்...?
சிகரெட்டில் நிக்கோடின் எனும் நச்சு தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும். பிள்ளை பேறே இருக்காது ..!
இதில் ஆண் என்ன? பெண் என்ன..? பிள்ளையே பிறக்காது....!“
என்று சொல்லி முடித்தான்.
.
அவன் சொன்னது சரிதான்... நாம் தான் யோசித்து முடிவு எடுக்க தவறிவிட்டோம் என்று வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி...!!
#இப்படி தந்திரமான பேச்சைதான்😜 விளம்பரம்* செய்வோர்கள் கையாள்கிறார்கள்....!!
நாம்தான்😳 விழிப்புடன் இருத்தல் வேண்டும்....!!