Wednesday, July 11, 2018

ராஜாவும் பரிசும்

*_🌷🙏🏼🌷குட்டி கதை_*

_ஒரு "ராஜா" தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார்._

_திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும்._

_மந்திரி கூட நான்கு காவல்காரகளையும் அழைத்துச் செல்வார்._

_ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது._

_காட்டு வழியே வரும்போது திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள்._

_மந்திரியும் காவலர்களும் வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு நின்று விடுகிறார்கள்._

_எங்கிருந்தோ "ஆறு இளையர்கள்" வந்து அவர்களை காப்பாற்றுகிறார்கள்._

_மந்திரியுடன் ஆறு இளையர்களும் "ராஜாவிடம்" வருகிறார்கள்._

_"ராஜாவும்" மிகவும் சந்தோஷமடைந்து இளையர்களிடம்,_

_”உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்” என்று கூறுகிறார்._

_"முதல்" இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்கிறான்._

_"இரண்டாவது" இளைஞன் வசிக்க நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான்._

_"மூன்றாவது" இளைஞன் தான் வசிக்கும் கிராமத்தில் சாலைகள் சீர் செய்ய வேண்டும் என்று கேட்கிறான்._

_"நான்காவது" இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறான்._

_"ஐந்தாவது" இளைஞன் தன் குடும்பத்தினர் இழந்த மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்று கேட்கிறான்._

_அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன "ராஜா",_

_"ஆறாவது" இளைஞனைப் பார்த்து “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்கிறார்._

_இளைஞன் சற்று தயங்குகிறான்,_

_"ராஜா" மீண்டும் கேட்க இளைஞன் கூறுகிறான்,_

_"அரசே எனக்கு பொன், பொருள் என்று எதுவும் வேண்டாம்._

_வருடம் ஒருமுறை நீங்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என்னுடன் இருந்தால் போதும்” என்று சொன்னான்._

_"ராஜாவும்" இவ்வளவுதானா என்று முதலில் கேட்டார்._

_பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையை தெரிந்து கொண்டார்..._
_ஆம்._

_"ராஜா" அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால்,_

_அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும்._

_அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும்._

_வேலைக்காரர்கள் வேண்டும்._

_அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும்._

_சொல்லப் போனால் முதல் "ஐந்து" இளைஞர்களும் கேட்து எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும்._

_என்று தன் மகளையே திருமணம் செய்து கொடுத்தார் ,_

_என்று . . . ,_

_இந்தக் கதையை முடித்தார் பேச்சாளர்._

_இந்தக் கதையில் கூறிய "ராஜாதான்" அந்த "இறைவன்"._

_பொதுவாக எல்லோரும் "இறைவனிடம்"கதையில் கூறிய ,_

_முதல் "ஐந்து" இளைஞர்களைப் போல்,_

_தனக்கு வேண்டியதைக் கேட்பார்கள்._

_கடைசி இளைஞனைப் போல் "இறைவனே"நம்மிடம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் ,_

_மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும் என்பதற்கு,_

_எடுத்துக் காட்டாக இந்தக் கதையைக் கூறினார்._

*_முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்._*

No comments:

Post a Comment