Wednesday, January 5, 2011

இரண்டு தவளைகள்

சில தவளைகள் காட்டு வழியாக போய் கொண்டு இருந்தன. அங்கே ஒரு ஆழமான குட்டையில் இரண்டு தவளைகள் விழுந்து விட்டன. அதை பார்த்த மற்ற தவளைகள், அங்கே இருந்து மேலே வர முடியாது, நீங்க ரெண்டு பேரும் செத்து போன மாதிரிதான், அப்டீன்னு சொல்லி கத்திகிட்டு இருந்ததாம்.

இதை கேட்ட ஒரு தவளை உள்ளே விழுந்து செத்து போனதாம்.

மற்ற தவளை மிகவும் வேகமாக முயற்ச்சி செய்து கொண்டு இருந்த்தது. இதை கண்ட மற்ற தவளைகள் முன்பை விட அதிகமாக விழுந்து உயிரை விடும்படி கத்தியதாம்.

இதை கண்ட தவளை முன்பை விட அதிகமாக முயற்சித்து வெளியே வந்ததாம்.

மற்ற தவளைகள், இதை பார்த்து உனக்கு நாங்க சொன்னது கேட்கலையா? என்று கேட்டதாம்.

இது சொன்னதாம் "என்னக்கு காது கேட்காது".